Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

கரடி தாக்கியதில் முதியவர் காயம் :

பொள்ளாச்சி

வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகம் கல்லார் பிரிவு பகுதியில் உள்ள ஆனைமுடி எஸ்டேட் மேலாளரின் பங்களாவில், காவலாளியாக பணிபுரிந்து வருபவர் பெரியசாமி (74). நேற்று காலை பணிக்கு செல்லும் வழியில் நின்ற கரடி, இவரை தாக்கியது. இதில் இவரது இடது கையில் காயம் ஏற்பட்டது.

பெரியசாமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு முடீஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x