Published : 27 Jun 2021 03:13 AM
Last Updated : 27 Jun 2021 03:13 AM

சேலத்தில் சிறுத்தை நடமாட்டம்? தேடும் பணியில் வனத்துறை :

சேலம்: சேலம் கோனேரிக்கரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் காஷ்மீர்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்தம்பட்டி புறவழிச்சாலையையொட்டியுள்ள கோனேரிக்கரை பகுதியில் உள்ள 4 ஏக்கர் கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவர் தெரிவித்தார்.

இதையடுத்து, கரும்புத் தோட்ட உரிமையாளர் தங்கவேல், வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸார் கரும்பு தோட்டம் உள்ள பகுதியில் விலங்கின் கால் தடம் ஏதாவது பதிவாகி உள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், இரவு இருள் சூழ்ந்துவிட்டதால், பகலில் (இன்று) தேடுதல் பணியைத் தொடங்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். சேலத்தில் வாகன நடமாட்டம், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை புகுந்துள்ளதாக கூறப்படுவதால், அப்பகுதி மக்களிடம் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x