Published : 25 Jun 2021 03:14 AM
Last Updated : 25 Jun 2021 03:14 AM

இடதுசாரிகள், விசிக சார்பில் - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் சலீம், விடுதலை சிறுத்தைகள் தேவ. பொழிலன் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் முருகன், நாரா. கலைநாதன், இந்திய கம்யூனிஸ்ட் சேதுசெல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற் றோர் கச்சா எண்ணை விலை சர்வதேச சந்தையில் குறைந்த நிலையிலும் மத்திய பாஜக அரசு வரிகளை போட்டு மக்களை வதைப்பதாகவும், கரோனா ஊரடங்கில் இப்படிச் செய்வதால் மக்கள் மிகுந்த சிரமத்துக் குள்ளாகி இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் மக்களின் துன்ப துயரத்துக்கு நிவாரணம் தரும் வகையில் மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ7,500 வழங்க வேண்டும், நியாய விலைக்கடைகள் மூலம் 10 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாதந்தோறும் வழங்க வேண்டும், கரோனாவால் மரணமடைந்த குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x