Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு :

ஹைதராபாத்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாத 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நேற்று ஆந்திர உயர் நீதி மன்றம் ஒருவாரம் சிறை தண்டனை விதித்தது.

ஆந்திர அரசு ஊழியர்கள் 36 பேர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக அவர்களை பணி நிரந்தரம் செய்ய ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களான கிரிஜா சங்கர் மற்றும் சிரஞ்சீவி சவுத்ரி ஆகியோர் அமல்படுத்தவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதனால், தொடர்ந்து 4 முறை சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் விளக்க நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதில் அனுப்பாத ஐஏஎஸ் அதிகாரிகள், 36 பேரின் பணியையும் நிரந்தரம் செய்யவில்லை. இவ்வழக்கு குறித்து நேற்று இரு ஐஏஎஸ் அதிகாரிகளும் உயர்நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது உயர்நீதி மன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாத இருவரையும் ஒருவாரம் வரை சிறையில் அடைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x