Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

தமிழகத்தில் 7,427 பேருக்கு தொற்று : முதியவர்கள் உட்பட 189 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 7,427 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 189 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்4,267, பெண்கள் 3,160 என மொத்தம் 7,427 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 891, ஈரோட்டில் 795, சென்னையில் 439பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்து 29,924 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 61,329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 189 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 25, கோவையில் 23 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,386 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,071 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை3 கோடியே 13 லட்சத்து 40,264பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 70,923 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x