Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை :

வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம், சோப்போர் பகுதியில் உள்ள குண்ட் பிரத் கிராமத்தில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முதாசிர் பண்டிட் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சுற்றிவளைத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் முதாசிர் பண்டிட், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சோப்போரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பாஜகவின் 2 கவுன்சிலர்கள், ஒரு போலீஸ் காவலர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் முதாசிர் பண்டிட்டை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.

இந்த என்கவுன்ட்டர் தொடர் பாக காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜய்குமார் தனது ட்விட்டர் பதிவில், “சமீபத்தில் 3 போலீ ஸார், 2 கவுன்சிலர்கள் மற்றும்2 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதில் லஷ்கர் இ தொய்பா முக்கிய தீவிரவாதியான முதாசிர்பண்டிட்டுக்கு தொடர்புள்ளது. இது தவிர பல்வேறு தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டுள்ள முதாசிர், சோப்போர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x