Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM
வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம், சோப்போர் பகுதியில் உள்ள குண்ட் பிரத் கிராமத்தில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முதாசிர் பண்டிட் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சுற்றிவளைத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் முதாசிர் பண்டிட், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சோப்போரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பாஜகவின் 2 கவுன்சிலர்கள், ஒரு போலீஸ் காவலர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் முதாசிர் பண்டிட்டை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.
இந்த என்கவுன்ட்டர் தொடர் பாக காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜய்குமார் தனது ட்விட்டர் பதிவில், “சமீபத்தில் 3 போலீ ஸார், 2 கவுன்சிலர்கள் மற்றும்2 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதில் லஷ்கர் இ தொய்பா முக்கிய தீவிரவாதியான முதாசிர்பண்டிட்டுக்கு தொடர்புள்ளது. இது தவிர பல்வேறு தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டுள்ள முதாசிர், சோப்போர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT