Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

சேலம்  தொப்பூர் துணை மின்நிலையம் மற்றும் செக்காரப்பட்டி, மூக்கனூர் மின்னூட்டிகளில் இன்று (22-ம் தேதி) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது

சேலம்

 தொப்பூர் துணை மின்நிலையம் மற்றும் செக்காரப்பட்டி, மூக்கனூர் மின்னூட்டிகளில் இன்று (22-ம் தேதி) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தொப்பூர், செக்காரப்பட்டி, ஜோடுகுளி, சென்னாரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், குண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

இதேபோல, ஓமலூர் அடுத்த தும்பிப்பாடி துணை மின் நிலையம் மற்றும் புக்கம்பட்டி, எக்ஸ்பிரஸ், ஏர்போர்ட், இன்டஸ்ட்ரியல் மின் பாதைகளில் அவசர பராமரிப்புப் பணிகள் நாளை (23-ம் தேதி) மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, ஓமலூர், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காமலாபுரம், கொங்குப்பட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்னதிருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

 கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய மின் சாதனங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (22-ம் தேதி) காலை 3 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, குப்பச்சிப்பாறை, சோமநாதபுரம், கங்கசந்திரம், குருபரப்பள்ளி, பீமாண்டப்பள்ளி, குப்பச்சிப்பாறை, நல்லூர், சென்னசந்திரம், காரகுப்பம், சின்னார், சென்னப்பள்ளி, சாமல்பள்ளம், மேலுமலை, பிக்கனப்பள்ளி, உலகம், மாதரசனப்பள்ளி, எட்டிப்பள்ளி, தொட்டி, தளியூர், சாப்பரம், பனகமுட்லு, ஆட்சியர் அலுவலகம், வெங்கடாபுரம், லைன்கொல்லை, பெட்பென்டா, தேவராஜ் புரூட்ஸ், புதிய பேருந்து நிலையம், கீழ்சோமார்பேட்டை, சோக்காடு, ஆலப்பட்டி, வெலகலஅள்ளி, அர்பன், பவர் அவுஸ் காலனி, செந்தில் நகர், சீனிவாசா காலனி, பானகார தெரு, திருவண்ணாமலை ரோடு, பூசாரிப்பட்டி, பெரியகோட்டப்பள்ளி, பெரியதக்கேப்பள்ளி, சின்னதக்கேப்பள்ளி, பழையூர், வெங்கடாபுரம், தாளாப்பள்ளி, சவுளூர், விருதன்கெட்டு, பாறைக்கொட்டாய் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 12 வரை 3 மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என கிருஷ்ணகிரி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

ஓசூர்

 ஓசூர் கோட்டத்தைச் சேர்ந்த கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் அத்தியவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 22-ம் தேதி (இன்று) காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஓசூர் துணை மின்நிலையம் (காரப்பள்ளி பீடர்) பகுதிகளுக்கு உட்பட்ட ஒன்னல்வாடி, சானசந்திரம், காரப்பள்ளி, திரிவேணி கார்டன், எம்.டி.கார்டன், செந்தில்நகர் மற்றும், பாகலூர் துணை மின்நிலையம்(ஆலூர் பீடர்) பகுதிக்கு உட்பட்ட குடிசெட்லு, ஆலூர் ஆகியவற்றில் மின்நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாரிகானபுரம் துணை மின் நிலையம் (சூடகொண்டப்பள்ளி பீடர்) உட்பட்ட நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி, கெலவரப்பள்ளி மற்றும் சிப்காட்-பேஸ் 2துணை மின் நிலையம் (மார்க்கெட் பீடர்) பகுதிக்கு உட்பட்ட பத்தலப்பள்ளி மார்க்கெட், மாருதிநகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது, என ஓசூர் கோட்ட மின்வாரியத்துறை செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x