Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM
ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில், சர்வதேச யோகா தினமான நேற்று நிறுவனத்தின் இயக்குநர் நசிகேதா ரௌட் தலைமையில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து காணொலி மூலம் இயக்குநர் விளக்கமளித்தார். பின்னர், காணொலி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் இந்த நிறுவனத்தில் பயிற்சிபெறும் மாணவர்கள், யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இதில், மாதிரி சிறப்பு பள்ளியின் ஆசிரியர் லீலாவதி, யோகா ஆசிரியர் பிரேமா ஆகியோர் யோகா பயிற்சி முறைகளை செய்து காட்டினர். சிறப்பு கல்வி ஆசிரியர் தனவேந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT