Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

மதுரையில் பத்தாம் வகுப்பு மாணவர் கொலையில் 5 பேரிடம் விசாரணை :

மதுரையில் பத்தாம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரைப் பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மகப்பூபாளையத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. காதல் திருமணம் செய்த இவரது மகன் முகமது சையது ஈசாக் (17). பத்தாம் வகுப்பு மாணவர். இவர் மாடக்குளம் கண்மாய் அருகே வயல்வெளியில் இரு நாட்களுக்கு முன்பு பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த எஸ்.எஸ். காலனி போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்த வீரா மற்றும் அவரது நண்பர்கள் அம்மையப்பன், மட்டைக்காமு, சக்குடி சந்தோஷ், கண்ணன், லோகேஷ், சுருளி, சாத்தையா ஆகியோருக்கு மாணவர் கொலைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, வீராவின் தந்தையை முகமது சையது ஈசாக்கின் நண்பர்கள் சிலர் தாக்கினர்.

இதில் ஆத்திரமடைந்ந்த வீரா, அவரது நண்பர்கள் சேர்ந்து ஈசாக்கின் நண்பர்களைத் தேடி னர். அப்போது, ஈசாக்கை பிடித்த அவர்கள், வயல்வெளிக்கு அழைத்துச்சென்று அவரது நண்பர்கள் குறித்த விவரம் கேட்டபோது, தகவல் தர மறுத் ததால் ஆத்திரத்தில் அவரை தாக்கிக் கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வீரா உள்ளிட்ட 5 பேரை போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x