Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM
தருமபுரி மாவட்டத்தில் நேற்று இ-பதிவு இல்லாமல் வந்த 12 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்யதனர்.
கரோனா தொற்று இரண்டாம் அலையின் தீவிரப் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
மேலும், பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற அரசு வலியுறுத்தியுள்ளது. கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று முகக் கவசம் அணியாத 181 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.36 ஆயிரத்து 200-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 11 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.5,500-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதுதவிர இ-பதிவு இல்லாத 12 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT