Published : 20 Jun 2021 03:13 AM
Last Updated : 20 Jun 2021 03:13 AM

கோயில் பணியாளர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கல் :

திருப்பூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் என 642 பேருக்கு, ரூ.33 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் கரோனா கால நிவாரண உதவித்தொகை மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்களை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமை வகித்தார். திருப்பூர் வட்டாரப் பிரிவில் 58 பேர், அவிநாசியில் 61, காங்கயத்தில் 160, தாராபுரத்தில் 61, பல்லடத்தில் 46, உடுமலையில் 49, மடத்துக்குளத்தில் 49, மூலனூரில் 98, ஊத்துக்குளியில் 60 பேர் என மாவட்டம் முழுவதும் 642 பயனாளிகளுக்கு கரோனா கால நிவாரண உதவித்தொகையாக ரூ. 4,000 மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் நா.நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x