Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார்(30). இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மொத்த மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரூ.2 லட்சம் மதிப்பிலான 135 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், அருண்குமாரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT