Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

ஆந்திராவில் 12 மணி நேரம் மட்டுமே ஊரடங்கு :

ஆந்திராவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு தளர்த்தி வருகிறது. அங்கு தற்போது காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தளர்வு அமலில் உள்ளது.

இதனை வரும் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாலை 6 மணி வரை அரசு நீட்டித்துள்ளது. இதனால் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

தளர்வு நேரத்தில் அனைத்து கடைகளும், வழிபாட்டுத் தலங்களும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தினசரி கரோனா தொற்று 1,500 வரை பதிவாவதால், 18 மணி நேர ஊரடங்கு நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x