Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தசகாயராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தபொதுநல மனு:
தூத்துக்குடி-நாசரேத் சிஎஸ்ஐ பேராயத்தின் கீழ் ஏராளமான பள்ளி,கல்லூரிகள் உள்ளன. இவர்களில் பலர் சிஎஸ்ஐ, சிஎஸ்ஐ பேராய நிர்வாகக் குழு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று நிர்வாகக் குழுவில் இடம்பெறுகின்றனர். அரசு ஊதியம்பெறும் ஆசிரியர்கள் மத அமைப்புகளின் நிர்வாகத்தில் இருப்பது சரியாக இருக்காது.
எனவே அரசிடம் ஊதியம்பெறும் ஆசிரியர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற ஆணையரை நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது,மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மதுரை - ராமநாதபுரம் சிஎஸ்ஐபேராய தேர்தலில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் போட்டியிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி-நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயத் தேர்தலிலும், ஆசிரியர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து, அரசு ஊதியம்பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தூத்துக்குடி-நாசரேத் சிஎஸ்ஐ பேராய நிர்வாகக் குழு தேர்தலில், அதன் கீழ் இயங்கும் அரசுஉதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலாளர், சிஎஸ்ஐ செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT