Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

திருவனந்தபுரம் - மதுரை இடையே நாளைமுதல் மீண்டும் ரயில் சேவை :

உடுமலை: திருவனந்தபுரம் - மதுரை இடையே நாளைமுதல் (ஜூன் 20) மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "கரோனா ஊரடங்கால் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது, கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், படிப்படியாக தளர்வு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு கட்டமாக, சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் (எண்:06101-06102) ரயில், நாளை முதல் (ஜூன் 20) மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த சேவை, மதுரையில் இருந்து 21-ம் தேதி முதல் தொடங்கும். இதனால் மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x