Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM

தடுப்பூசி போடாவிட்டால் நிறுவனங்களை இயக்கத் தடை :

புதுச்சேரி: அனைத்துக் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட வேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்படும் என்று புதுச்சேரி தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர் துறை செயலர் மற்றும் ஆணையர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் ஆகியோர் 10 நாட்களுக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். புதுச்சேரி அரசு கரோனா தடுப்பு மாநில செயற்குழுவின் கடந்த 14-ம் தேதி குறிப்பாணைப்படி, 10 நாட்களுக்குள் மேற்கூறியவாறு தடுப்பூசி போடவில்லையெனில் அத்தகைய நிறுவனங்கள் இயங்க இயலாத நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x