Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM
மருத்துவர்கள், பணியாளர்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தி பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களை தண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஒரே மாதிரியான இன்சூரன்ஸ் தொகை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மருத்துவக் கழகத்தின் மதுரை கிளை சார்பாக 2,400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ், கருப்பு முகக் கவசம் அல்லது கருப்புச் சட்டை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இப்போராட்டத்தில் மருத்துவர்கள் ரவீந்திரன் (தலை வர்), மணிவண்ணன், அழக வெங்கடேசன், அனீத், சாவித்திரி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT