Published : 18 Jun 2021 03:14 AM
Last Updated : 18 Jun 2021 03:14 AM

அருவருக்கத்தக்க வகையில் உள்ளது - யூ-டியூபர் மதனின் பேச்சை கேட்டுவிட்டு வாதிடுங்கள் : வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

யூ-டியூபர் மதனின் அருவருக்கத்தக்க பேச்சுகள் கேட்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதை கேட்டுவிட்டு, முன்ஜாமீன் வழக்கில் வாதிடுமாறு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளது.

யூ-டியூபர் மதன்குமார், யூ-டியூப் சேனல் மூலமாக எல்லைமீறுவதாகவும், சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவிலும் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதன் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, மதன்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் தரவில்லை. தொழில் போட்டியாளர்கள் தந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.

அவருக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என்று வாதிட்ட காவல் துறை தரப்பு, மதனின் பேச்சுகள் அடங்கிய ஆடியோவை தாக்கல்செய்தது. ‘‘அதை கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மதனின் பேச்சு அருவருக்கத்தக்க வகையில், காது கொடுத்துக் கேட்கமுடியாத அளவுக்கு மோசமாக உள்ளதால், மதனின் பேச்சுகளைகேட்டுவிட்டு, அதன்பிறகு முன்ஜாமீன் வழக்கில் வாதிடுங்கள்’’என்று மதனின் வழக்கறிஞருக்குஅறிவுறுத்தி, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x