Published : 18 Jun 2021 03:14 AM
Last Updated : 18 Jun 2021 03:14 AM
ஈரோடு: பவானிசாகரில் தடுப்பூசி மையம் ஏற்படுத்த வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பவானிசாகர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் 15 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் புன்செய்புளியம்பட்டி, விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. பவானிசாகர் ஒன்றியமானது, புளியம்பட்டி- பவானிசாகர் என இரு மையங்களாக பிரிந்து அமைந்துள்ளது. இந்நிலையில், தற்போது தடுப்பூசி போடப்படும் இரு மருத்துவ மனைகளும் புளியம்பட்டி மையத்திலேயே அமைந்துள்ளது.
இதனால், பவானிசாகர் மையத்தில் உள்ள கொத்தமங்கலம், புங்கார், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம், உத்தண்டியூர் ஆகிய ஊராட்சி மற்றும் பவானிசாகர் பேரூராட்சி மக்கள் தடுப்பூசி போட புளியம்பட்டிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பவானிசாகரில் உள்ள அரசு மருந்தகத்திலோ அல்லது அரசு பள்ளியிலோ தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT