Published : 18 Jun 2021 03:14 AM
Last Updated : 18 Jun 2021 03:14 AM
பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு சென்னை சென்ட்ரல் - பெங்களூரு உட்பட 18 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் தேவை அடிப்படையில் ரயில்களின் சேவையை ரயில்வே நீட்டித்து வருகிறது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் - பெங்களூரு (02608/02607), மைசூரு - மயிலாடுதுறை (06232/06231), திருநெல்வேலி - மைசூரு (06235/06236)உட்பட மொத்தம் 18 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பயணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT