Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

நத்தம் அருகே - போலி மருத்துவர்கள் இருவர் கைது :

நத்தம் அருகே பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை மற்றும் மணக்காட்டூர் கிராமங்களில் மருத்துவம் படிக்காமல் டாக்டர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் மருத்துவம் பார்த்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உதவியுடன் நத்தம் போலீஸார் செந்துறையில் சந்தேகத்துக்கிடமான வகையில் மருத்துவம் பார்த்த சிவலிங்கம் என்பவரின் சான்றிதழை ஆய்வு செய்தனர்.

இதில் அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தது தெரிய வந்தது. அவர் சிகிச்சைக்கு பயன்படுத்திய அலோபதி மருத்துவ மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸார் சிவலிங்கத்தை கைது செய்தனர்.

இதேபோல் மணக்காட்டூர் கிராமத்தில் போலீஸார் திடீர் சோதனை நடத்தியதில், அங்கு மருத்துவம் படிக்காமல் கிராம மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்த வனிதா என்பவரையும் நத்தம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x