Published : 18 Jun 2021 03:16 AM
Last Updated : 18 Jun 2021 03:16 AM

ஜூன் 21-ல் காந்தி மார்க்கெட் மீண்டும் திறப்பு - கரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை : மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்

திருச்சி

திருச்சி கலையரங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப் பூசி போடும் முகாமை ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்திலேயே தடுப்பூசி போடுவதில் 6-வது இடத்தில் திருச்சி மாவட்டம் உள்ளது. இதுவரை மொத் தம் 4.05 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 2,800 பேரில் ஏற்கெனவே 2,300-க்கும் அதிகமானோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மொத்த வியாபாரத்துக்காக காந்தி மார்க்கெட் ஜூன் 21-ம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படாது.

அடுத்த வாரம் முதல் திருச்சி மாநகரில் 4 கோட்டங்களிலும் தினமும் ஒரு வார்டு என்ற அடிப்படையில் பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் மக்களுக்கு அலைச்சல் தவிர்க்கப் படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x