Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM
பெங்களூரு; கரோனா தொற்றை சரியாக கையாளாததால் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என மாநில சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏ.க்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் உள்ளிட்டோர் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆனால், எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற கூடாது என 65 பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா மேலிடத்துக்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் சிங் நேற்று பெங்களூரு வந்தார். தனியார் விடுதியில் தங்கியுள்ள அவர் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் பைரதி பசவராஜ், ஆனந்த் சிங், சோமசேகர், பி.சி.பாட்டீல் உள்ளிட்டோரை தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் மாற்ற கோரும் விவகாரம் தொடர்பாகவும், எடியூரப்பாவுக்கு எத்தனை பேர் ஆதரவு இருக்கிறது? அடுத்த முதல்வராக யாரை நியமிக்கலாம் போன்றவை குறித்தும் பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா கூறும்போது, ‘‘மேலிட தலைவர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நானே முதல்வராக தொடர்வேன். எனவே, முதல்வர் மாற்றம் குறித்து பேச வேண்டியஅவசியம் இல்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT