Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM

கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு நலத்திட்ட உதவி :

நாமக்கல்: நாமக்கல்லில் கரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள், அமரர் ஊர்தி பணியாளர்கள், மின் மயான பணியாளர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் அரிசி, காய்கறி உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், பயனாளிகளுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் அரிசி, காய்கறி, முட்டைகள் மற்றும் மளிகைப்பொருட்களை வழங்கினார்.

முன்னதாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான 30 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள், 20 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் முகக்கவசங்களை தன்னார்வலர்கள் வழங்கினர். மேலும், முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டைகுமார், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் த.கா.சித்ரா, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x