Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM

விதி மீறிய பின்னலாடை நிறுவனத்துக்கு ‘சீல்’ :

ஈரோடு/ நாமக்கல்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கரோனா பாதிப்பால் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள புது மேட்டூர், பள்ளிபாளையம், தவுட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கருப்புசாமி கோயில் பகுதியில் இயங்கி வந்த பின்னலாடை நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, விதிகளை மீறி இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து ஆலையை மூடி சீல் வைக்க உத்தரவிட்ட ஆட்சியர் ரூ.5000 அபராதம் விதிக்கவும், அந்தியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இதேபோல், வீட்டு உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றொரு நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

விதிமுறை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு ‘சீல்’

பரமத்தி வேலூர் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. பாண்டமங்கலத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாரணவீரன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரு பல்பொருள் அங்காடி மற்றும் இரும்புக் கடை ஒன்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்திருந்தது தெரியவந்தது. அவற்றை காவல் துறையினர் மூடி ‘சீல்’ வைத்தனர். மேலும், கடைக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதமும் விதித்து வசூலிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x