Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM
திருவாருர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கீழவீதி பகுதியில், தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில், அந்நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் கே.ராஜகோபால் தலைமை வகித்தார்.
இதன் விநியோக மைய உரிமை பெற்றுள்ள நடராஜன் ஏஜென்சி உரிமையாளர் என்.சந்திரசேகரன் வரவேற்றார். வர்த்தக சங்கத் தலைவர் பிஜிஆர்.ராஜாராமன், வர்த்தக சங்க இணைச் செயலாளர் பி.சங்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், தமிழ் பால் நிறுவன துணை பொதுமேலாளர் கே.ராஜகோபால் பேசியது: இளைஞர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கும், பால் விற்பனையாளர்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்தவும் தமிழ் பால் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலுள்ள அனைத்து வட்டங்களிலும் தமிழ் பால் விநியோக மையங்கள் அதிக அளவில் திறக்கப்பட உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT