Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM
இந்நிலையில், ஜெயராமன் பெயரில் உள்ள விவசாய நிலத்தை தங்களுக்கு பிரித்துத் தருமாறு பழனி அடிக்கடி தந்தையுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று அதிகாலை இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த பழனி, கொடுவாளால் ஜெயராமனை வெட்டியுள்ளார். மேலும், அவர் தலை மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில், நிகழ்விடத்திலேயே ஜெயராமன் உயிரிழந்தார். இதுதொடர்பாக அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பழனியை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT