Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

வட சென்னையில்பலத்த காற்றுடன் மழை :

வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை காற்றுடன் மழை பெய்தது.

வடக்கு வங்கக்கடல் பகுதியில்காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக மேகமூட்டத்துடன் புழுக்கமான சூழல் காணப்பட்டது. இந்நிலையில் வட சென்னையைச் சேர்ந்தபெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம், கொளத்தூர், தண்டையார்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவியது. எழும்பூர், ராயப்பேட்டை, சேப்பாக்கம், சேத்துப்பட்டு, அரும்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை மட்டும் பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x