Published : 13 Jun 2021 03:14 AM
Last Updated : 13 Jun 2021 03:14 AM

பூட்டிய வீட்டில் திருடிய 5 பேர் கைது :

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஹயாத் நகரைச் சேர்ந்தவர் ஜெய சந்திரன். இவரது மனைவி கார்த்திகா (30). இவர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக திருப்பத்தூர் கவுதமபேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 10-ம் தேதி கார்த்திகாவின் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் விரைந்து சென்று பார்த்தபோது 2 கிலோ வெள்ளி பொருட்கள், 7 கிராம் தங்கம் மற்றும் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு, கார்த்திகா வீட்டில் திருடியதாக அன்னான்ட பட்டியைச் சேர்ந்த பரணிதரன் (23), வெங்கடேசன் (22), ஞானசேகர்(23) மற்றும் அன்னை நகரைச் சேர்ந்த டிக்சன் (21), நியாஷ் பாஷா (23) ஆகியோரை நேற்று கைது செய்தனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வீடு பூட்டியிருந்ததால் திருடியதாக ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கார்த்திகா வின் வீட்டில் திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x