Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில்மனிதக் குரங்கு குட்டியை ஈன்றது :

சென்னை

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில், மனிதக் குரங்கு ஒரு குட்டியை ஈன்றுள்ளது.

சென்னையை அடுத்துள்ள வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2005-ம் ஆண்டு சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்துஒரு ஜோடி மனிதக் குரங்குகள் கொண்டுவரப்பட்டன. அவற்றுக்கு கோம்பி (28), கவுரி என்கிற சுசி (23) என பெயரிடப்பட்டது. இந்தஜோடி கடந்த 9-ம் தேதி குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளன. அவற்றை வன உயிரின மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த மனிதக் குரங்குகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் அழிவின் விளம்பில் வாழும் விலங்குகள் என்று வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x