Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

‘சச்சின் டெண்டுல்கரை கூறியிருப்பார்’ பாஜக தலைவருக்கு சச்சின் பைலட் பதில் :

ஜெய்ப்பூர்: உ.பி.யை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் அண்மையில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் காங்கிரஸ் விலகலாம் என ஊகங்கள் எழுந்தன. இதுதொடர்பாக, கடந்த 2017 உ.பி. தேர்தலுக்கு முன் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்தவரான ரீட்டா பகுகுணா ஜோஷி நேற்று முன்தினம் “சச்சினிடம் பேசினேன். அவர் அதிருப்தியில் இருக்கிறார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார்” என்று கூறினார்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றார். அப்போது ரீட்டா பகுகுணாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சச்சின் பைலட் பதில் அளிக்கும்போது, “சச்சினிடம் பேசினேன் என்று ரீட்டா கூறியுள்ளார். ஒருவேளை அவர் சச்சின் டென்டுல்கரிடம் பேசியிருக்கலாம். என்னிடம் பேசவில்லை. என்னிடம் பேசும் துணிச்சல் அவருக்கு இல்லை. பாஜகவில் சேருவது தொடர்பாக நான் எந்த பேச்சுவார்த்தையிலும் இல்லை” என்றார்.

ஜிதின் பிரசாத் வெளியேறிய 2 நாட்களுக்குப் பிறகு சச்சின் பைலட் குறித்து காங்கிரஸ் கூறும்போது, “கால மாற்றம் ஏற்படும். சச்சின் பைலட் பொறுமை காக்க வேண்டும்” என்று தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x