Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் இருந்த - 39.35 ஹெக்டேர் நிலங்கள் வனத்துறையிடம் ஒப்படைப்பு :

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆனைமலை, பொள்ளாச்சி வட்டங்களில் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 39.35 ஹெக்டேர் நிலங்களை ஒதுக்கு நிலமாக மாற்ற,வனத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதன்படி, பொள்ளாச்சி வட்டத்தில் 2.552 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மரக்கிடங்கு வளாகம், 2.025 ஹெக்டேர் பரப்பு கொண்ட ஜமீன் ஊத்துக்குளி வனத்துறை அலுவலர்கள் குடியிருப்பு, ஆனைமலை வட்டத்தில் ஒடையகுளம் கிராமத்தில் 34.78 ஹெக்டேர் பரப்பு கொண்டபெருமாள்சாமி கரடு (சேனைக்கல்வராயன் குன்று) நிலம் ஆகியவற்றை தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 26-ன் கீழ் ஒதுக்கு நிலமாக மாற்றி, மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம்39.35 ஹெக்டேர் பரப்பு கொண்டநிலமானது, தற்போது வனத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒதுக்கு நிலமானது, அனைத்து வனச்சட்டங்களுக்குள் உட்பட்டுத்தப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கு நிலங்களை, காப்புக்காடாக மாற்ற தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல ஆனைமலை வட்டத்தில் உள்ள ஆனைமலை பண்ணை மற்றும் சேத்துமடை பகுதியில் உள்ள பகுதிகளை ஒதுக்கு நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x