Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM

62 ரயில்கள் மூலம் தமிழகத்தில் 4,500 டன் ஆக்சிஜன் விநியோகம் :

சென்னை

தமிழகத்துக்கு நேற்று வரை இயக்கப்பட்ட 62 ரயில்கள் மூலம் 4,500 டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவிவந்தது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன், மத்திய அரசு ஏற்பாட்டில் ரயில்வே மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

குறிப்பாக, கடந்த மே 14-ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, சத்தீஸ்கரில் இருந்து வந்த 59-வது ஆக்சிஜன் ரயில் (113.79 டன்) சென்னை துறைமுகத்துக்கும், 60-வது ஆக்சிஜன் ரயில் (126.91 டன்) ஒடிசாவில் இருந்து தண்டையார்பேட்டைக்கும் நேற்று வந்தன.

இதேபோல, ஒடிசாவில் இருந்து வந்த 61-வது ஆக்சிஜன் ரயில் (86.22 டன்) சேலத்துக்கும், 62-வது ஆக்சிஜன் ரயில் (81.64 டன்) கோவைக்கும் சென்றன.

தமிழகத்துக்கு இதுவரை 62 ஆக்சிஜன் ரயில்கள் மூலம் மொத்தம் 4,500 டன் ஆக்சிஜன் வந்துள்ளது. இதில், சென்னை தண்டையார்பேட்டைக்கு மட்டும் அதிகபட்சமாக 28 ஆக்சிஜன் ரயில்கள் வந்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x