Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM

மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு கேடு : கிருஷ்ணகிரி ஆட்சியர் எச்சரிக்கை

மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதால் சுற்றுசூழலுக்கு கடும் விளைவு களை ஏற்படுத்தும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளுவதற்காக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரை, நீர் நிலைகள் மற்றும் ஒதுக்குப்புறமான பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

தற்போது நிலவிவரும் கரோனா நோய் தொற்று சூழலில், மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, அனைத்து மருத்துவமனைகள், கரோனா நோய் தொற்று பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து அந்தந்த பகுதிகளில் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

தொற்று ஏற்படுத்தக்கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமித்தல் கூடாது. மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதை தவிர்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளை பின்பற்றாமல் மீறு பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x