Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM

கரோனாவால் பெற்றோரை இழந்த - குழந்தைகளுக்கு உதவ ஆட்சியர் உறுதி :

நாகர்கோவில்

``கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் குழந்தைகளுக்கு உரியநிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரி வித்தார்.

கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில், ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

`கரோனா நோய் தொற்றினால் பெற்றோரை இழந்த பாதுகாப்பு அல்லது பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கண்டறிந்து, தேவையான பாதுகாப்பு, நிவாரணம் வழங்குதல். கரோனா நோய் தொற்றினால் பெற்றோரை இழந்துவாடும் குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மகளிர் திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, சுகாதார பணிகள்இணை இயக்குனர் பிரகலாதன்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிமாறன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x