Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM

கும்பகோணத்தை சுற்றியுள்ள பேரூராட்சிகளில் மின் தகன மேடை : தஞ்சாவூர் ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கும்பகோணத்தை சுற்றியுள்ள 3 பேரூராட்சிகளில் மின் தகன மேடை அமைக்கக் கோரிய மனுவை தஞ்சாவூர் ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன், உயர்நீதிமன்ற கிளை யில் தாக்கல் செய்த மனு: கும்ப கோணத்தை சுற்றிலும் 39 கிராம ஊராட்சிகள், 3 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு சாதாரணமாக எரியூட்டும் மயானங்கள்தான் உள்ளன. கும்பகோணம் பெரு மாண்டியில் மின் தகன மேடை உள்ளது. தற்போது கரோனா இரண்டாம் அலை பரவலால் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை பெருமாண்டி மின் மயானத்துக்குத்தான் கொண்டு வருகின்றனர். இதனால் மயானத்தில் கூட்டம் கூடுவதால் கரோனா தொற்று மேலும் அதி கரிக்க வாய்ப்புள்ளது.

எனவே கும்பகோணத்தை சுற்றியுள்ள திருநாகேஸ்வரம், தாரா சுரம், சோழபுரம் பேரூராட்சிகளில் கரோனா தொற்றால் உயிரிழப் பவர்களின் உடல்களை எரியூட்ட மின் தகன மேடை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர் வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கையை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x