Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

‘சசிகலா அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை' :

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும்.

கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி வருகிறது. அது முழுக்க, முழுக்க பொய்யான தகவல். அது போன்ற சம்பவம் தற்போது எங்கும் நிகழவில்லை. அதிமுகவினர் தெளிவாக உள்ளனர். அவர்களை குழப்பவே பொய்யான ஆடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டவர். மீண்டும் அவர் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை. கட்சி உயர்மட்ட குழு ஒன்று கூடி இதற்கான அறிவிப்பை வெளியிடும். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியிலேயே ஓபிஎஸ், இபிஎஸ் கட்சியை வழி நடத்தி வருகின்றனர். கட்சி தலைமை விதிக்கும் கட்டளையை அதிமுகவினர் நிறைவேற்றும் வகையிலேயே எங்கள் செயல்பாடு உள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை அவர் பலமுறை சந்தித்துள்ளார்.

சி.வி.சண்முகம் பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார். அவர் மட்டும் அல்ல, அதிமுகவினர் யாரும் அஞ்சமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x