Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
இரண்டாம் தவணையாக ரேஷன் கடைகள் மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் பெறுவதற்கு இன்று (மே 11) முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் முத்துராமலிங்கம் வீதி, பாரதிநகர், பெருமாள் கோயில் வீதி, பூமார்க்கெட் ராமலிங்க சவுடேஸ்வரி கூட்டுறவு பண்டகசாலை ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொருட்கள் வாங்க வந்தபொதுமக்களிடம் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதோடு, பொருட்கள் வாங்க வரும் முதியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரத்தியேக வரிசை ஏற்படுத்தித்தர உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் சக்கர பாணி கூறும்போது, “அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக் கும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்க 11-ம் தேதிமுதல் வரும் 14-ம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம்வீடு, வீடாக டோக்கன்கள் வழங்கப்படும்.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் வரும் 15-ம் தேதி முதல்இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்கள்அடங்கிய தொகுப்பு ஆகிய இரண்டும் வழங்கப்படும்” என்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT