Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குநராக டிஜஜி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி லட்சுமியை லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் நேற்று பிறப்பித்துள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரியான லட்சுமி, சென்னை மாநகர காவல் துறையில் தென்சென்னை காவல் இணை ஆணையராக இருந்தார்.
இந்நிலையில், திடீரென்று பணியில் இருந்து விருப்ப ஓய்வு கேட்டு, தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் அனுப்பினார். ஆனால், அவரது விருப்ப ஓய்வு கடிதத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், உயர் காவல் துறை அலுவலர்களும் இவரது விருப்ப ஓய்வு கடிதத்தை திரும்பப்பெற வற்புறுத்தினர்.
அரசு உத்தரவு
இந்நிலையில், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த லட்சுமியை, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT