Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

சிதம்பரம் அருகே : இறால் குட்டை வெட்டுவதற்கு எதிர்ப்பு :

கடலூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் கற்பனைச்செல்வம் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தராஜ் மற்றும் கிராம மக்கள் நேற்று சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது:

சிதம்பரம் அருகே உள்ள நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தின் மேற்கு பகுதியில் புதிதாக இறால் குட்டை சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் வெட்டப்படுகிறது. இதன் பக்கத்தில் உள்ள உள்ள விளைநிலங்கள் சுமார் 60 ஏக்கர் இந்த குட்டையில் இருந்து வரும் கழிவு நீர், உப்பு நீர் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கிராமத்தின் குடிநீருக்கான ஆதாரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இறால் குட்டை வெட்டுவதற்கு மற்றும் செயல்படுத்துவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x