Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM
புதுச்சேரி சோனாம்பாளையம் ரயில்வே லைன் ஒட்டியுள்ள ஒரு புதரில் 6 பேர் கும்பல் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்த ஒதியஞ்சாலை போலீஸார் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோயில் வீதியைச் சேர்ந்த எரிக் (25), ரோமார்க் (22), லசார் கோயில் வீதி பிரடரிக் (20), உழவர்கரை விக்னேஷ் (21), இளங்கோ நகர் ஆனந்தகுமார் (23), முதலியார்பேட்டை பிரேம்குமார் (எ) பிரவீன் (22) என்பதும், இவர்களில் எரிக்கும், ரோமார்க்கும் அரியாங்குப் பத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்ட தெப்ளானின் சகோ ணதரர்கள் என்பதும் தெரியவந்தது. அண்ணன் கொலை செய்த வர்களை பழி தீர்க்க முடி வெடுத்தஇவர்கள் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வழக்கு செலவுகளை எதிர்கொள்ள அப்பகுதியில் சுப் பையா சாலை பெட்ரோல் பங்க் தொழிலதிபரை வழிமறித்துமிரட்டி கொள்ளையடிப்பதற்காக கத்தி, பைப் உள்ளிட்ட ஆயுதங் களுடன் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT