Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

திருவானைக்காவல் கோயில் யானை அகிலாவுக்கு பிரத்யேக குளியல் தொட்டி :

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் கோயில் யானைக்கென பிரத்யேக குளியல் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

பஞ்சபூத தலங்களில் நீர்த் தலமாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலில் அகிலா என்ற யானை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறது. இந்தநிலையில், கோயில் வளாகத்தில் யானை அகிலாவுக்கென பிரத்யேக குளியல் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக கோயில் உதவி ஆணையர் செ.மாரியப்பன் கூறியது: யானை அகிலா 10 ஆண்டுகளுக்கும் மேலாக இறைப் பணியில் உள்ளது. இந்தநிலையில், யானை குளிப்பதற்காக கோயில் வளாகத்துக்குள் நாச்சியார் தோப்பு பகுதியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய குளியல் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. யானை எளிதாக இறங்கி, ஏற வசதியாக சரிவுப் பாதை அமைக்கப்படுகிறது. குளியல் தொட்டி அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் நிறைவடையும்.

இதனிடையே, குளியல் தொட்டிக்குள் இறங்கி, ஏற யானைக்கு இப்போதே பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், யானைக்கு தினமும் நடைபயிற்சி அளிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் வனப் பகுதி அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x