Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கவச உடைகள் அளிப்பு :

காரைக்காலில் பணியாற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 400 கவச உடைகள், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிடம் புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வி.சத்தியமூர்த்தி கவச உடைகளை ஒப்படைத்தார்.

மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், அரசு பொது மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் மதன்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x