Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM
கரோனா தொற்றை கட்டுப்படுத்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்.
ஆனால் நம் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் மத்தியில் கரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களும், அச்சமும் நிலவி வருகின்றன. இந்த அச்சத்தை போக்க பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. மற்றொரு புறம், மக்களை ஈர்க்கும் விதமான கவர்ச்சிகரமான திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஹிஞ்சிலி நகராட்சி நிர்வாகம் கடந்த சில தினங்களாக புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியோருக்கு மளிகைப் பொருட்களில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அந்த நகராட்சி கவுன்சிலின் செயல் அதிகாரியான மனோரஞ்சன் சாஹு அண்மையில் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தால் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT