Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

2-ம் நாளாக கரோனா தொற்று பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தது :

புதுடெல்லி: இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்குக் கீழ் குறைந்தது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை கரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை 86,161 ஆக இருந்தது. இது சற்று கூடி கடந்த 24 மணி நேரத்தில் 92,712 ஆக பதிவாகி உள்ளது. எனினும், கடந்த 2 நாட்களில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரு லட்சத்துக்கு கீழாக உள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 1,815 ஆக பதிவாகி உள்ளது. அதற்கு முந்தைய நாளில் இந்த எண்ணிக்கை 1,867 ஆக இருந்தது.

மேலும், கடந்த திங்கட்கிழமை 18.7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இது ஞாயிற்றுக்கிழமை செய்த பரிசோதனை எண்ணிக்கையை விட சற்று அதிகம். கேரளாவில் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பும் குறைந்துள்ளது. எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டில் 18,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 409 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x