Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM
புதுச்சேரி : வில்லியனூர் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இச்சிக்கலை விரைந்து தீர்க்க பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரிடம் அத்தொகுதியின் எம்எல்ஏ சிவா வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட உத்திரவாகினிபேட், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், வினிஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ‘அதை சரி செய்ய வேண்டும்’ என்று அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் சிவா எம்எல்ஏவிடம் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களுடன் சென்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் படும் இன்னல்களை எடுத்துக்கூறி, இப்பிரச்சினையை உடனே சரி செய்ய வேண்டும் என்று கூறினார். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT