Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM
புதுச்சேரி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சார்பில் அண்ணாசிலை அருகே போராட்டம் நடந்தது. விவசாயிகள் சங்கத் தலைவர் கீதநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது வேளாண் சட்ட நகலை விவசாயிகள் எரிக்க முற்பட்டனர்.
போவீஸார் சட்ட நகலில் இருந்த தீயை அணைத்தனர். அதையடுத்து விவசாயிகள் சட்ட நகலை கிழித்து எறிந்தனர். ‘கரோனா காலத்தில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீஸார் எச்சரித்தவுடன், விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT