Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

செஞ்சி அருகே 4,550 பெட்டிகள் புகையிலை பொருட்கள் பறிமுதல் :

செஞ்சி அருகே 4,550 பெட்டி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செஞ்சி அருகே மேல்பாப் பாம்பாடி கிராமத்தில் நேற்றுநல்லாண் பிள்ளை பெற்றாள் போலீஸார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 4,550 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் வசிக்கும் காதர் (31), திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் அருள் (36) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடத்தப்பட்ட புகையிலை பொட்டலங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x