Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
பெங்களூரு: கர்நாடகாவின் ஹாவேரியைச் சேர்ந்த சி.எம்.உதாசி (85), 1983-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஹாவேரி மாவட்டம் ஹங்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். பின்னர் ஜனதா கட்சியில் இணைந்த இவர் 1985-ல் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். 2004-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த சி.எம்.உதாசி ஹங்கல் தொகுதியில் போட்டியிட்டு குமாரசாமி தலைமையிலான அரசிலும், 2008-ல் எடியூரப்பா தலைமையிலான அரசிலும் அமைச்சராக இருந்தார்.
இரு நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட சி.எம்.உதாசி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT