Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் :

திருப்பூர்: தமிழக மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு விநியோகிக்க வேண்டும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதிய அக்கறை செலுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாநகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போயம்பாளையம் பேருந்து நிறுத்தம், கிழக்கு குருவாயூரப்பன் நகர் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் வி.எஸ்.சசிகுமார் தலைமை வகித்தார். ஊத்துக்குளி வட்டம் செங்கப்பள்ளி பகுதியில் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சின்னசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க ஊத்துக்குளி தாலுகா செயலாளர் ஜி.கே.கேசவன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல உடுமலை, மடத்துக்குளம், கணியூர், பெதப்பம்பட்டி உட்பட 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் சவுந்திரராஜன், தாலுகா செயலாளர் ரணதேவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x